search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் ஐஏஎஸ் மாணவி திடீர் மாயம்
    X

    ஒரத்தநாடு அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் ஐஏஎஸ் மாணவி திடீர் மாயம்

    ஒரத்தநாடு அருகே திருமணத்துக்கு பெற்றோர் வற்புறுத்தியதால் ஐ.ஏ.எஸ். மாணவி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு, சோழகன் கரையை சேர்ந்த ராமசாமி மகள் வினிதா (வயது 27).

    இவர் சென்னையில் செயல்படும் சைதை துரைசாமி அகாடமி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அவரை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்தி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்த வினிதா மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராமசாமி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருடன் படித்த கடலூர் வாலிபர் கடத்தி சென்றுவிட்டரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி மாயமான சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×