search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவானைக்காவல் பகுதியில் நாளை மின்தடை
    X

    திருவானைக்காவல் பகுதியில் நாளை மின்தடை

    திருவானைக்காவல் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    திருச்சி:

    தமிழ்நாடு மின்வாரிய ஸ்ரீரங்கம் பகுதி செயற்பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

    ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் திருவானைக்காவல் சன்னதி தெரு, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கர்நகர், பஞ்சகரை ரோடு, அருள் முருகன் கார்டன், ஏ.யூ.டி. நகர், ராகவேந்திர கார்டன், காந்திரோடு, டிரங்க் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகர், 

    எம்.கே.பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழ கொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாகூர் தெரு, திருவெண்ணைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, பிச்சாண்டார்கோவில் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட டோல்கேட், பிச்சாண்டார்கோவில், மாருதி நகர், கோகுலம் காலனி, வி.என்.நகர், ராஜாநகர், ராயர் தோப்பு, தாளக்குடி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×