என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணப்பாறையில் கியாஸ் ஏஜென்சி கடை பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்7 Feb 2019 4:32 PM GMT (Updated: 7 Feb 2019 4:32 PM GMT)
மணப்பாறையில் கியாஸ் ஏஜென்சி கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மணப்பாறை:
மணப்பாறை திண்டுக்கல் சாலையில் கியாஸ் ஏஜென்சி கடை நடத்தி வருபவர் ஏகாம்பரம். இவர் நேற்று மாலை வழக்கம் போல் ஏஜென்சியை பூட்டி சென்றார். பின்னர் இன்று காலையில் கியாஸ் ஏஜென் சியை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு அறுக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கபணம், கம்யூட்டர் மற்றும் பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.
அங்கிருந்து சி.சி.டி.வி. காமிராவும் திருப்பி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந் ததும் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சி.சி.டி.வி. காமிராவும் திருப்பி விடபட்டுள்ளதால் அதில் கொள்ளை நடந்த சம்பவம் எதுவும் பதிவாக வில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வையம்பட்டியில் 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
மணப்பாறை பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தினால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கொள்ளை சம்பவத்தை தடுக்க போலீசார் ரோந்து நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X