search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணப்பாறையில் கியாஸ் ஏஜென்சி கடை பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை
    X

    மணப்பாறையில் கியாஸ் ஏஜென்சி கடை பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை

    மணப்பாறையில் கியாஸ் ஏஜென்சி கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    மணப்பாறை:

    மணப்பாறை திண்டுக்கல் சாலையில் கியாஸ் ஏஜென்சி கடை  நடத்தி வருபவர் ஏகாம்பரம். இவர் நேற்று மாலை வழக்கம் போல்  ஏஜென்சியை பூட்டி சென்றார். பின்னர் இன்று காலையில் கியாஸ்  ஏஜென் சியை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு  அறுக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் இருந்த  ரூ.5 லட்சம் ரொக்கபணம், கம்யூட்டர் மற்றும் பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. 

    அங்கிருந்து  சி.சி.டி.வி. காமிராவும் திருப்பி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந் ததும் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். சி.சி.டி.வி. காமிராவும் திருப்பி விடபட்டுள்ளதால் அதில் கொள்ளை நடந்த சம்பவம் எதுவும் பதிவாக வில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வையம்பட்டியில் 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.    

    மணப்பாறை பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தினால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கொள்ளை சம்பவத்தை தடுக்க போலீசார் ரோந்து நடவடிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×