search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமக்குடியில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் - பொருட்கள் கொள்ளை
    X

    பரமக்குடியில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் - பொருட்கள் கொள்ளை

    ரெடிமேட் கடை மற்றும் ஆட்டோமொபைல் கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    பரமக்குடி:

    பரமக்குடி எல்லைப்புற காந்தி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அந்த பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், மணிகண்டன் வழக்கம் போல் கடையை அடைத்துச் சென்றார்.

    நேற்று விடுமுறை தினம் முடிந்து இன்று காலை அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது அங்கே இருந்த சட்டை, பேண்ட் போன்றவை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து பரமக்குடி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மணிநகர் பகுதியில் முதுகுளத்தூர் பொதிகுளத்தைச் சேர்ந்த அசோக்ராஜா என்பவர் நடத்தி வரும் ஆட்டோமொபைல் கடைக்குள்ளும் மர்ம மனிதர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த ரூ.16 ஆயிரம் ரொக்கம் மற்றும் டி.வி.டி. பிளேயர், கார்களில் பொருத்தக்கூடிய மிரர் டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்தும் பரமக்குடி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×