என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரம் அருகே திருமண ஆசை காட்டி பெண் பலாத்காரம்
Byமாலை மலர்3 Feb 2019 11:00 AM GMT (Updated: 3 Feb 2019 11:00 AM GMT)
ஒட்டன்சத்திரம் அருகே திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையைச் சேர்ந்தவர் துரைச்சாமி மகன் சூரிய குமார் (வயது 23). இவருக்கும் கொடைக்கானலைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
சம்பவத்தன்று சூரியகுமார் இளம்பெண்ணை ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் இளம்பெண்ணை சந்திப்பதை சூரிய குமார் தவிர்த்து வந்துள்ளார்.
திடீரென சூரியகுமார் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சூரியகுமாரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X