search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது
    X

    புதுக்கோட்டை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது

    புதுக்கோட்டை அருகே புதிய வீடு கட்டுவதற்கான அனுமதி அளிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் புதிதாக வீடு கட்டுவதற்கான ஏற்பாடு செய்து வந்தார். இதற்காக குன்னத்தூர் ஊராட்சி மன்ற செயலர் ராஜேந்திரனிடம், வீடு கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்தார். அப்போது ராஜேந்திரன், அனுமதி அளிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வேளாங்கண்ணி இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ,ராஜேந்திரனை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து ராஜேந்திரனிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அவர் குன்னத்தூர் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர்.
    Next Story
    ×