search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு தலைமை ஆசிரியர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரய்யா முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் அண்ணா சிலை, கடைவீதி, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது போன்ற விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் கண்ணதாசன் வரவேற்றார். முடிவில் துணை தலைமையாசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார். 
    Next Story
    ×