என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நொய்யல் பகுதியில் ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
Byமாலை மலர்14 Jan 2019 6:21 PM GMT (Updated: 14 Jan 2019 6:21 PM GMT)
நொய்யல் பகுதியில் ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
நொய்யல்:
நொய்யல் பகுதியில் உள்ள கோம்புபாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பில் சாலைமேம்பாடு உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமிபூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அந்த பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் 64 பயனாளிகளுக்கு பழுதடைந்த வீடுகளை புனரமைக்கும் வகையில், ரூ.32 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைக் கான ஆணைகளை வழங்கினார். வீரசோளிபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்தார். இதில் காகிதஆலை முன்னாள் பேரூராட்சி தலைவர் கமலக்கண்ணன், காகிதபுரம் பேரூர்செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம், புன்செய்புகளூர் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், கூட்டுறவு வங்கித்தலைவர்கள் முனுசாமி, ரங்கநாதன், முன்னாள் ஊராட்சித்தலைவர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நொய்யல் பகுதியில் உள்ள கோம்புபாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பில் சாலைமேம்பாடு உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமிபூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அந்த பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் 64 பயனாளிகளுக்கு பழுதடைந்த வீடுகளை புனரமைக்கும் வகையில், ரூ.32 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைக் கான ஆணைகளை வழங்கினார். வீரசோளிபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்தார். இதில் காகிதஆலை முன்னாள் பேரூராட்சி தலைவர் கமலக்கண்ணன், காகிதபுரம் பேரூர்செயலாளர் வழக்கறிஞர் சதாசிவம், புன்செய்புகளூர் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், கூட்டுறவு வங்கித்தலைவர்கள் முனுசாமி, ரங்கநாதன், முன்னாள் ஊராட்சித்தலைவர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X