search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராதாபுரம், சேரன்மாதேவி பகுதியில் 19-ந்தேதி மின்தடை
    X

    ராதாபுரம், சேரன்மாதேவி பகுதியில் 19-ந்தேதி மின்தடை

    ராதாபுரம் மற்றும் சேரன்மாதேவி பகுதியில் 19-ந்தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

    நெல்லை:

    ராதாபுரம், மேலக்கல்லூர், கரிசல்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராதாபுரம், பெத்தரெங்கபுரம், கால்கரை, கோலியான்குளம், தனக்கர்குளம், பரமேஸ்வரபுரம், தனியார் காற்றாலை பண்ணைகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், மேலக்கல்லூர், சேரன்மாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூர், சங்கன்திரடு ஆகிய பகுதிகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும்,

    கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடைய மான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி ஆகிய பகுதிகளுக்கு அன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வினியோக செயற் பொறியாளர்கள் தென்னரசு (காற்றாலை பண்ணை திட்டம்), புலமாடன் (கல்லிடைக்குறிச்சி) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×