search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை மாயம்
    X

    திண்டுக்கல் அருகே திருமணமான 6 மாதத்தில் புது மாப்பிள்ளை மாயம்

    திண்டுக்கல் அருகே திருமணம் ஆன 6 மாதத்தில் புது மாப்பிள்ளை மாயமானதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள போஜனம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). இவர் வேல்வார்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆயில் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கார்த்திகா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற பெருமாள் வீடு திரும்பவில்லை. அவரது மோட்டார் சைக்கிள் மட்டும் சுடுகாடு அருகே தனியாக கிடந்தது.

    தலை பொங்கலுக்காக விருந்துக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் பெருமாள் மாயமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கார்த்திகா வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரை யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×