search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட காட்சி.
    X
    பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட காட்சி.

    பெண்ணாடம் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம் இடித்து தகர்ப்பு

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தகர்ப்பட்டது.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5 வரை வகுப்புகள் உள்ளது. மொத்தம் 31 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிக்கட்டிடம் மிகவும் பழமையானதாகும். சுவர் முழுவதும் விரிசலுடன் காணப்பட்டது. இதுகுறித்து தலைமை ஆசிரியை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை பள்ளியின் மேற்கூரை கான்கிரட் பகுதி திடீரென்று இடிந்து கீழே விழுந்தது. இதனால் பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    பள்ளியில் பணியாற்றி வந்த 2 ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளை பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள கோவிலில் வைத்து பாடம் நடத்தினர்.

    பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.

    அப்போது அந்த பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு கலெக்டர் அன்புச்செல்வன் ஏற்பாடுகள் செய்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை வடகரை ஊராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளி கட்டிடம் இடித்து தகர்க்கப்பட்டது.

    அதே இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் விரைவில் கட்டப்படுகிறது. அந்த பணிகள் தொடங்கி முடியும் வரை மாணவ- மாணவிகள் அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் தங்கி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×