என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தமபாளையம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
Byமாலை மலர்12 Jan 2019 8:54 AM GMT (Updated: 12 Jan 2019 8:54 AM GMT)
உத்தமபாளையம் அருகே மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி:
உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமல்லாது குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போலீசார் ரோந்து சென்று மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை கைது செய்தபோதும் மணல் கடத்தலை தடுக்க முடியவில்லை. உத்தமபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் போலீசார் கோம்பை சாலையில் ரோந்து சென்றனர்.
அம்மாபட்டி பிரிவு அருகே வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டதில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிவராஜ்(வயது28) என்பவரை கைதுசெய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X