search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரி அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது
    X

    கோத்தகிரி அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேர் கைது

    கோத்தகிரி அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கீழ்கோத்தகிரி பகுதியை சேர்ந்த இளங்கோ (வயது 49) என்பவர் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் தேனாடு கூப்பு கிராமத்தை சேர்ந்த செல்வம் (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் கோத்தகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×