search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமிக்கு பாலியல் தொல்லை- வியாபாரிக்கு 10 ஆண்டு ஜெயில்
    X

    சிறுமிக்கு பாலியல் தொல்லை- வியாபாரிக்கு 10 ஆண்டு ஜெயில்

    நெற்குன்றம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    போரூர்:

    நெற்குன்றம், பால விநாயகர் நகர் 1-வது தெருவில் தங்கி கோழிக்குஞ்சு வியாபாரம் செய்து வந்தவர் கென்னடி முருகன்.

    இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோழிக்குஞ்சு வாங்க வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து வியாபாரி கென்னடி முருகனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு அளித்தார்.

    அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கென்னடி முருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுதரப்பு வக்கீலாக கவுரி ஆஜரானார்.
    Next Story
    ×