search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுமதியின்றி மண் கடத்தி வந்த லாரி டிரைவர் கைது
    X

    அனுமதியின்றி மண் கடத்தி வந்த லாரி டிரைவர் கைது

    இண்டூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மண் கடத்தி வந்த லாரி டிரைவரை கைது செய்தனர்.
    இண்டூர்:

    தர்மபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் தருமபுரி-பென்னாகரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக அனுமதியின்றி டிப்பர் லாரியில் செம்மண் கடத்தி வந்த டிரைவர் முருகன் (வயது 39), லாரியின் உரிமையாளர் முனுசாமி ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள முனுசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். பின்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.      
    Next Story
    ×