என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலையில் மின்வாரிய அதிகாரி மர்ம மரணம்
Byமாலை மலர்31 Dec 2018 10:26 AM GMT (Updated: 31 Dec 2018 10:26 AM GMT)
திருவண்ணாமலையில் மின்வாரிய அதிகாரி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை:
சிவகாசியை சேர்ந்தவர் சுகந்திரன் (57), திருவண்ணாமலை மின்வாரிய அலுவலக மேலாளர். வேங்கிகால் வள்ளியம்மாள் நகரில் அவரது மனைவி விஜயலெட்சுமியுடன் வசித்து வந்தார்.
மகள் பிரியதர்ஷினி திருமணம் முடிந்து மதுரையில் வசிக்கிறார். கடந்த 27-ந்தேதி விஜயலெட்சுமி தூத்துக்குடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். சுகந்திரன் மட்டும் தனியாக இருந்தார். அவரது மனைவியும், மகளும் இன்று காலை திருவண்ணாமலைக்கு வந்தனர்.
வீட்டுக்குள் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது. சத்தம் போட்டும் சுகந்திரன் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்குள்ள குளியலறையில் சுகந்திரன் இறந்து கிடந்தார். இதனைக் கண்டு அவர்கள் கதறி அழுதனர்.
திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சுகந்திரன் உடல் வீங்கி இருந்தது. இதனால் அவர் இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. போலீசார் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசியை சேர்ந்தவர் சுகந்திரன் (57), திருவண்ணாமலை மின்வாரிய அலுவலக மேலாளர். வேங்கிகால் வள்ளியம்மாள் நகரில் அவரது மனைவி விஜயலெட்சுமியுடன் வசித்து வந்தார்.
மகள் பிரியதர்ஷினி திருமணம் முடிந்து மதுரையில் வசிக்கிறார். கடந்த 27-ந்தேதி விஜயலெட்சுமி தூத்துக்குடியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். சுகந்திரன் மட்டும் தனியாக இருந்தார். அவரது மனைவியும், மகளும் இன்று காலை திருவண்ணாமலைக்கு வந்தனர்.
வீட்டுக்குள் கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது. சத்தம் போட்டும் சுகந்திரன் கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்குள்ள குளியலறையில் சுகந்திரன் இறந்து கிடந்தார். இதனைக் கண்டு அவர்கள் கதறி அழுதனர்.
திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சுகந்திரன் உடல் வீங்கி இருந்தது. இதனால் அவர் இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. போலீசார் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X