என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே அடுத்தடுத்து நடந்த கொள்ளை
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வருசநாடு சிங்க ராஜபுரத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் புகுந்த 3 மர்ம நபர்கள் வேலுவை தாக்கி கீழே தள்ளிவிட்டு பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க நகை, ரூ.6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி மீனாட்சியையும் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டனர். இது குறித்து வருசநாடு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சிங்கராஜபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் முத்துக்குமார் வேலை விஷயமாக வருசநாடு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1250 மற்றும் கடிகாரத்தை பறித்து சென்று விட்டனர். இது குறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் வருசநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை மற்றும் வழிப் பறியால் அப்பகுதியில் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்