என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரி அருகே ஆசைக்கு இணங்குமாறு பள்ளி மாணவியை மிரட்டிய வாலிபர் கைது
Byமாலை மலர்26 Dec 2018 9:27 AM GMT (Updated: 26 Dec 2018 9:27 AM GMT)
தருமபுரி அருகே குளிப்பதை படம் பிடித்து ஆசைக்கு இணங்குமாறு பள்ளி மாணவியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் ஏ.பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் பெரியசாமி (வயது 28). இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
ஓஜிபள்ளி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஏ.பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவி பள்ளிக் கூடத்திற்கு வரும்போது பெரியசாமி வழிமறித்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவத்தன்று அந்த மாணவியிடம் அவர் சிறுமி குளிப்பதை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருப்பதாகவும், ஆசை இணங்க வேண்டும் என்றும், மறுத்தால் மாணவி குளிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினார்.
இதனால் அந்த மாணவி கதறி அழுதபடியே வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை பற்றி பெற்றோரிடம் கூறினார்.
இதுகுறித்து உடனே மாணவியின் பெற்றோர் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் பெரியசாமி மீது போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் ஏ.பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் பெரியசாமி (வயது 28). இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
ஓஜிபள்ளி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஏ.பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவி பள்ளிக் கூடத்திற்கு வரும்போது பெரியசாமி வழிமறித்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவத்தன்று அந்த மாணவியிடம் அவர் சிறுமி குளிப்பதை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருப்பதாகவும், ஆசை இணங்க வேண்டும் என்றும், மறுத்தால் மாணவி குளிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினார்.
இதனால் அந்த மாணவி கதறி அழுதபடியே வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை பற்றி பெற்றோரிடம் கூறினார்.
இதுகுறித்து உடனே மாணவியின் பெற்றோர் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் பெரியசாமி மீது போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X