search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான செந்தில்குமார்
    X
    கைதான செந்தில்குமார்

    நங்கவள்ளியில் தாயை அடித்து கொன்ற மகன் கைது

    நங்கவள்ளியில் நள்ளிரவில் தாயை அடித்து கொன்ற மகனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி கே.எம்.பி.நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். மீன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வைடூரியம் (வயது 58). இவர்களது மகன் செந்தில்குமார் (35).

    செந்தில்குமாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூலக்காட்டை சேர்ந்த பரமேஸ்வரி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவருடன் அடிக்கடி செந்தில்குமார் தகராறில் ஈடுபட்டதால் அவரும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் வைடூரியத்திற்கும், மகன் செந்தில்குமாருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றிரவு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் வீட்டின் அருகில் கிடந்த அரிவாள் மற்றும் உருட்டு கட்டையால் தாயை சரமாரியாக தாக்கினார். அதனை தடுக்க வந்த தந்தை வெங்கடேசனையும் அவர் கட்டையால் தாக்கினார்.

    இதில் நிலைகுலைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வைடூரியத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 1.45 மணியளவில் வைடூரியம் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடேசனுக்கு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே செந்தில்குமார் தப்பியோடி விட்டார்.

    தகவல் அறிந்த நங்கவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமாருக்கு சற்று மனநிலை பாதிப்பு உள்ளதும், அமாவாசை மற்றும் பவுர்ணமி காலங்களில் அது அதிகரிப்பதும், பவுர்ணமியான நேற்று அதிகரித்ததால் தாயுடன் தகராறில் ஈடுபட்டு வெறித்தனமாக அவரை அடித்து கொலை செய்ததும் தெரிய வந்தது.

    இதற்கிடையே அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை பிடித்து நங்கவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.



    Next Story
    ×