search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி அருகே மணல் கடத்தியவர்கள் கைது - லாரிகள் பறிமுதல்
    X

    காரைக்குடி அருகே மணல் கடத்தியவர்கள் கைது - லாரிகள் பறிமுதல்

    காரைக்குடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் அள்ளி வந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    காரைக்குடி:

    செட்டிநாடு போலீசார் நேமத்தான்பட்டி சோதனைச் சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை மறித்து நிறுத்தினர். அந்த லாரியை போலீசார் சோதனை செய்த போது, எவ்வித ஆவணமின்றி லாரியில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூசையப்பர்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 22), மரக்காத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (33) பள்ளிதம்மம் பகுதியை சேர்ந்த செந்தில் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல வடக்கு போலீஸ் சரகம் என்.ஜி.ஓ. காலனி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காரைக்குடி பகுதியை சேர்ந்த மணிவேல் (40) என்பவர் அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த காரைக்குடி வடக்கு போலீசார் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

    இதுபோன்று பள்ளத்தூர் போலீசார் கல்லூர் சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஸ்ரீராம் நகரை சேர்ந்த குமார் (22) என்பவரை போலீசார் கைது செய்து, லாரியுடன் மணலை பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×