search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னமனூரில் நர்சை கடத்திச் சென்ற வாலிபருக்கு வலை வீச்சு
    X

    சின்னமனூரில் நர்சை கடத்திச் சென்ற வாலிபருக்கு வலை வீச்சு

    சின்னமனூர் அருகே நர்சை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி ஒத்தக்கடை வீதியைச் சேர்ந்த மகேஸ்வரன் மனைவி அமுதா (வயது 36). இவர் ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அமுதா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை அன்னக்கொடி ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அவர் தனது புகாரில் கூழையனூரைச் சேர்ந்த ஈஸ்வரன் (42) என்பவர்தான் அமுதாவை கடத்தி சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் அமுதாவையும், அவரை கடத்தி சென்றவர்களையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×