search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருபுவனையில் தாய் கண்டித்ததால் இளம்பெண் மாயம்
    X

    திருபுவனையில் தாய் கண்டித்ததால் இளம்பெண் மாயம்

    திருபுவனையில் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டு இருந்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் மாயமானார்.

    திருபுவனை:

    திருபுவனை பாரதியார் வீதியை சேர்ந்தவர் பலராமன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி திலகவதி. இவர்களது மகள் திவ்யா (வயது 19).

    இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். திவ்யா அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் திலகவதி கண்டித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்றும் வீட்டில் திவ்யா செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதனை திலகவதி கண்டித்ததால் திவ்யா மனவருத்தத்துடன் இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது வீட்டில் இருந்த திவ்யாவை திடீரென காணாமல் திலகவதி அதிர்ச்சி அடைந்தார்.

    உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் திவ்யா இல்லை. இதையடுத்து திலகவதி தனது மகள் மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×