search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாயல்குடி அருகே விபத்து- ஆட்டோ டிரைவர் பலி
    X

    சாயல்குடி அருகே விபத்து- ஆட்டோ டிரைவர் பலி

    சாயல்குடி அருகே மோட்டர் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாயல்குடி:

    சாயல்குடி அருகே உள்ள மாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது சேக்தாவூது (வயது 35). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று ஓப்பிலானை சேர்ந்த நண்பர் முகமது நிலா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மலட்டாறு விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ராமேசுவரம் நோக்கி சென்ற கார் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது. மின்னல் வேகத்தில் வந்த கார் முகமது சேக்தாவூத் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமது சேக்தாவூது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய முகமது நிலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து முகமது சேக்தாவூது மனைவி பாத்திமா சாயல்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப் பதிவு செய்து கர்நாடக மாநிலம் சென்னப்பட்டணத்தை சேர்ந்த கார் டிரைவர் மோகன்குமார் (29) என்பவரை கைது செய்தார்.
    Next Story
    ×