search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை
    X

    குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை

    குமரி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகின சேரி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 58) தொழிலாளி. இவரது மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால் மன வருத்தத்துடன் பாஸ்கரன் காணப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஒழுகினசேரி பகுதியில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பெர்னாட்சேவியர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாம்ஜி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குளச்சல் சாஸ்தன்கரை பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் ரோச். இவரது மகள் நிகிஷா (25). இவருக்கும் திருமணம் ஆகவில்லை.

    இவரது பெற்றோர் நேற்று அருகில் உள்ள வள்ளவிளைக்கு சென்று இருந்தனர். வீட்டில் நிகிஷா மட்டும் தனியாக இருந்து உள்ளார். இந்த நிலையில் வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீடு பூட்டிக்கிடந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நிகிஷா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ் பெக்டர் சுஜித்ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடைவிளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (31) டிரைவர். இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது உறவினர்கள் கண்டித்து உள்ளனர். மேலும் இவருக்கு திருமணம் ஆகாத வருத்தத்திலும் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் சுரேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×