search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் வாலிபருக்கு கொலை மிரட்டல்- தொழிலாளி கைது
    X

    தூத்துக்குடியில் வாலிபருக்கு கொலை மிரட்டல்- தொழிலாளி கைது

    தூத்துக்குடியில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி முடுக்கு காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது27). சம்பவத்தன்று இவர் தனது மாமா சிவசாமியுடன் முத்தையாபுரம் பகுதியில் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ஸ்டீல் மணி (29) என்பவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அவர் சிவசாமி மீது மோதியதாக தெரிகிறது. இதை மாடசாமி தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்டீல் மணி, மாடசாமியை கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுபற்றி முத்தையாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு வழக்குப் பதிவு செய்து ஸ்டீல் மணியை கைது செய்தனர்.
    Next Story
    ×