search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் முஸ்லீம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
    X

    பெரம்பலூரில் முஸ்லீம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது ரபீக் தலைமை வகித்தார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத்தலைவர் அபுபக்கர் சித்திக், மக்கள் உரிமை பொது மேடை ஒருங்கிணைப் பாளர் அசன் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    கட்சியின் மாநில பேச்சாளர் கே.எஸ். சாகுல் ஹமீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் செல்லதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞரணி மாநில இணைச் செயலாளர் முருகையன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அருள், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காம ராசு, விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்மாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  

    ஆர்ப்பாட்டத்தில், பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற சட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும். நீதிக்காக தேசத்தின் அபிமானிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்திக், செய்தி தொடர்பாளர் அகமது இக்பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைத் தலைவர்  முஹம்மது பாருக் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர்  அப்துல்கனி நன்றி கூறினார். 

    இதேபோல, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை எதிரே, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் மாவட்டச் செயலாளர் மீரான் மொய்தீன், தமுமுக. மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா, மாவட்ட பொருளாளர் முஹமது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்,  தி.மு.க. மாவட்டச்செயலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    Next Story
    ×