search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் கண்ணாடியை உடைத்து ஸ்ரீஹரிகோட்டா அதிகாரியிடம் நகை, லேப்டாப் கொள்ளை
    X

    கார் கண்ணாடியை உடைத்து ஸ்ரீஹரிகோட்டா அதிகாரியிடம் நகை, லேப்டாப் கொள்ளை

    ஸ்ரீஹரிகோட்டா அதிகாரியிடம் நகை, லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த கும்பலை சி.சி.டி.வி. கேமரா பதிவு மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருபவர் நாகராஜ். இவர் நேற்று மதியம் 2 மணிக்கு காரில் சென்னை ஆலந்தூர் பகுதிக்கு வந்தார்.

    ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.

    சாப்பிட்டு முடிந்ததும் திரும்பி வந்து பார்த்தார். அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்த 20 கிராம் தங்க நெக்லஸ், லேப்டாப் மற்றும் அவரது மகளின் எம்.எஸ்.சி. படிப்பு சான்றிதழ் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    நாகராஜ் இதுபற்றி பரங்கிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் கார் கண்ணாடியை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×