search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் அருகே முகமூடி அணிந்து பெண்ணிடம் செயின் பறிப்பு
    X

    வேலூர் அருகே முகமூடி அணிந்து பெண்ணிடம் செயின் பறிப்பு

    வேலூர் அருகே கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்து வந்த வாலிபர் செயின் பறித்து சென்ற சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பெருமுகை தனியார் என்ஜினியரிங் கல்லூரி சாலை பகுதியில் வசிப்பவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சரஸ்வதி (50). இவரது வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மாம் நபர்கள் முகமூடி அணிந்து பைக்கில் வந்தனர். அவர்கள் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 10 1/2 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டனர். இதனால் திடுக்கிட்ட சரஸ்வதி கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×