என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே மாடு மேய்க்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
Byமாலை மலர்1 Dec 2018 9:30 AM GMT (Updated: 1 Dec 2018 9:30 AM GMT)
ஒரத்தநாடு அருகே மாடு மேய்க்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே பேய்கரம்பன்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள வயலுக்கு தனது மாடுகளை ஓட்டி சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவலின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் அப்பகுதியில் புயலால் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் தடைபட்டுள்ள நிலையில் ஆறுமுகம் எப்படி மின்சாரம் தாக்கி இறந்தார் என்று மின்வாரியத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X