search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மடுகரையில் தனியார் நிறுவன சூப்பர்வைசர் தற்கொலை
    X

    மடுகரையில் தனியார் நிறுவன சூப்பர்வைசர் தற்கொலை

    காதலியை பார்க்க முடியாத ஏக்கத்தில் தனியார் நிறுவன சூப்பர்வைசர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரையில் பிளைவுட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஓம்கார்மிஸ்ரா (வயது22) என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சூப்பர் வைசராக பணியில் சேர்ந்தார்.

    அருகில் உள்ள ஊழியர் குடியிருப்பில் தங்கி ஓம்கார்மிஸ்ரா பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஓம்கார்மிஸ்ரா தான் தங்கி இருந்த அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் மடுகரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்த ஓம்கார்மிஸ்ராவின் செல்போனை சோதனை செய்த போது அதில் பள்ளியில் படிக்கும் போதே ஒரு மாணவியை காதலித்து வந்ததும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பியதும் தெரியவந்தது.

    மேலும் தினமும் காதலியுடன் செல்போனில் பேசி வந்த ஓம்கார்மிஸ்ரா காதலியை நேரில் பார்க்க முடியாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இதுபற்றி ஓம்கார்மிஸ்ராவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் உடலை ஒப்படைக்க வரவழைத்துள்ளனர்.

    Next Story
    ×