search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து- கிளீனர் காயம்
    X

    கிருஷ்ணகிரி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து- கிளீனர் காயம்

    கிருஷ்ணகிரி அருகே டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் கிளீனருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    திருவண்ணாமலை வந்தவாசியை அடுத்த தேசூர் அருகே உள்ள திருமால்பாடி  பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 27). லாரி டிரைவரான இவர் நேற்று சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து டீசல் நிரப்பிய டேங்கர் லாரியை பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஓட்டி சென்றார்.

    அவருடன் ஜப்திகாரணி பகுதியைச்சேர்ந்த கிளீனர் சுந்தர்ராஜ் (30) என்பவர் உடன் சென்றார். டேங்கர் லாரி இன்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள மாதேபள்ளி காலனி அருகே கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென்று வண்டி கட்டுபாட்டை இழந்து நிலைத்தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கிளீனர் சுந்தர்ராஜுக்கு தலையிலும், காலிலும் லேசான காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் டீசல் ஆறாக ரோட்டில் ஓடியது.  இதனை அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பக்கெட்டுகளிலும், பாட்டில்களிலும் பிடித்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கத்திக்குப்பம் சம்பவ இடத்திற்கு வந்து மேலும் அசாம்பவிதங்கள் நடைபெறாமல் இருக்க டேங்கர் லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவத்தால் தேசியநெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×