search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மாயம்
    X

    நெய்வேலி அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மாயம்

    நெய்வேலி அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த தெற்கு வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகள் காயத்ரி (வயது 20). இவர் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று கல்லூரி விடுதியில் இருந்து நெய்வேலியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். ஆனால் அவர் நெய்வேலிக்கு வரவில்லை.

    இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் காயத்ரி படித்து வந்த கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர் நெய்வேலிக்கு செல்வதாக எங்களிடம் கூறி சென்றார் என்றனர். உடனே மாணவியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர் இதுகுறித்து காயத்ரியின் தந்தை சிவராமன் மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனாள் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.
    Next Story
    ×