search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
    X

    பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

    பெரம்பலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது.
    பெரம்பலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணை 56, 100, 101-யை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் வருகிற 4-ந் தேதி முதல் நடைபெற இருக்கிற வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு பெரம்பலூரில் நேற்று நடந்தது.

    மாநாட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், அரசு ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தயாளன், பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அருள்ஜோதி, அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் கவியரசன், உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் மகேந்திரன் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் வேலை நிறுத்த போராட்ட விளக்கவுரையாற்றினார். முடிவில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரி அனந்தன் நன்றி கூறினார். கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநாட்டில் அறிவுறுத்தப்பட்டது.
    Next Story
    ×