என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முத்தியால்பேட்டையில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை குருசித்தானந்தா கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி வாசுகி (45). இவர்கள் முத்தியால்பேட்டையில் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களுடைய மகன் செல்வகணபதி (25). இவர் புதுவை தனியார் கல்லூரியில் கேட்டரிங் படித்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த செல்வகணபதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே போய் விட்டு வீட்டுக்கு வந்த வாசுகி கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மகன் செல்வகணபதி தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.
உடனே தூக்கில் இருந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வகணபதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது செல்வகணபதியின் செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில் சமூகவளைத்தளத்தில் ஏற்பட்ட காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வதாக (சேட்டஸ்) போட்டிருந்தாக கூறப்படுகிறது.
மேலும் போலீசார் வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பதும் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்