search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
    X

    ஆம்பூர் அருகே வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

    ஆம்பூர் அருகே வீட்டில் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த தோட்டாளத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் ரமேஷ் (வயது 27). வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக ஆம்பூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் ரமேஷ் வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.

    வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து ரமேசை கைது செய்தனர்.

    Next Story
    ×