search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
    X

    திருமங்கலம் 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    மலேசியாவில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்த வாலிபர் திருமங்கலம் 4 வழிச்சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
    பேரையூர்:

    மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அருண்தமிழரசு. மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீலாக உள்ளார். இவரது மகன் பாலஸ்ரீஹரி (வயது22).

    இவரது சித்தப்பா சக்திவேல் மகன் பிபின்குமார் (18). மலேசியாவில் வசித்து வரும் இவர் சமீபத்தில் ஊருக்கு வந்தார்.

    நேற்று பிபின்குமார், சகோதரர் பாலஸ்ரீஹரியுடன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் 4 வழிச்சாலையில் சென்றார். தனக்கன் குளம்-வேடர்புளியங்குளம் சந்திப்பில் சென்றபோது விருதுநகரில் இருந்து மதுரை வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் பிபின்குமார் உள்பட 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிபின்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாலஸ்ரீஹரி அஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×