search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பம்மலில் அக்காள் திருமணமாகி சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    பம்மலில் அக்காள் திருமணமாகி சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    பம்மலில் அக்காள் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த தம்பி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தாம்பரம்:

    பம்மல் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் ராஜா. டிப்ளமோ படித்துள்ளார். இவர் தனது அக்கா மீது மிகவும் பாசத்துடன் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரது அக்காவிற்கு கடந்த 14-ந்தேதி திருமணம் நடந்து கணவர் வீட்டிற்கு சென்றார். இதனால் ராஜா மிக மனவேதனையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சங்கர் நகர் போலீசார் ராஜா உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×