search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கயத்தாறில் மின்சாரம் தாக்கி ஊழியர் கருகினார்
    X

    கயத்தாறில் மின்சாரம் தாக்கி ஊழியர் கருகினார்

    கயத்தாறில் டிரான்ஸ்பார்மரை சரிசெய்து கொண்டிருந்த ஊழியர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவரது உடல் கருகியதால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கயத்தாறு:

    கயத்தாரைச் சேர்ந்தவர் உச்சிமாகாளி. இவர் வில்லிசேரி மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக உள்ளார். இன்று காலை இவர் அங்குள்ள டிரான்ஸ்பார்மரை சரிசெய்ய சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவரது உடல் கருகியது. உடனே அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×