search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூட்டிய வீட்டுக்குள் புகை சூழ்ந்து சிறுவன், சிறுமி பரிதாப பலி
    X

    பூட்டிய வீட்டுக்குள் புகை சூழ்ந்து சிறுவன், சிறுமி பரிதாப பலி

    பெங்களூரு அருகே பூட்டிய வீட்டுக்குள் புகை சூழ்ந்து சிறுவன், சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெங்களூரு:

    பெங்களூரு அருகே எலக்ட்ரானிக், பசவபுரா பகுதியில் ஒரு அபார்ட் மெண்ட்டில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் தேவேந்திரப்பா. இவரது மனைவி ரூபம்மா. இவர் அக்கம் பக்கத்து வீடுகளில், வீட்டு வேலைகளை செய்து வருகிறார். இவர்கள், அதே அபார்ட்மெண்ட்டில் கீழ்தளத்தில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நேற்று காலை அவர்களது மகள் லட்சுமி(3) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள். மகன் சுவஜ்ஜன்(5) விளையாடிக் கொண்டிருந்தான். குழந்தைகள் இருவரையும் வீட்டில் விட்டு கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

    சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டிலிருந்து புகை வருவதாக அக்கம், பக்கத்தினர் ரூபம்மாவிடம் தெரிவித்ததையடுத்து, அவர் விரைந்து சென்று வீட்டை திறந்து பார்த்தபோது, வீட்டுக்குள் கரும்புகை சூழ்ந்தவாறு காணப்பட்டது. மேலும், குழந்தைகள் சுவஜ்ஜன், லட்சுமி ஆகிய இருவரும் புகையில் மூச்சு திணறி அங்கேயே இறந்திருந்தனர்.

    இதை கண்டு ரூபம்மா கண்ணீர்விட்டு கதறி அழுதார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், வீட்டில் குழந்தைகள் இருவரும் தனியாக இருந்து விளையாடும்போது, அங்கிருந்த தீப்பெட்டியை சுவஜ்ஜன் விளையாட்டாக பற்ற வைத்துள்ளான், அதிலிருந்து தீப்பொறி கிளம்பி, வீட்டில் இருந்த பேப்பர், படுக்கை விரிப்பு ஆகியவற்றில் தீ பிடித்து வீட்டுக்குள் பரவியுள்ளது. மேலும், வீட்டு ஜன்னல்கள் அடைபட்டிருந்ததால், புகை வெளியேறாமல், குழந்தைகள் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மேலும், பிரேத பரிசோதனைக்கு பிறகு, குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் தெரியவரும் என்றும் எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×