search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடுகத்தூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    ஒடுகத்தூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    ஒடுக்கத்தூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள அத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி மகன் வல்லரசு (வயசு 19). கம்பி கட்டும் தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இதனையறிந்த பெற்றோர் இளம்பெண்ணை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த இளம்பெண் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    காதலி இறந்த துக்கத்தில் மனமுடைந்து வல்லரசு சுற்றி திரிந்தார். நேற்று மாலை அவரது விவசாய நிலத்துக்கு சென்றார். அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டை கயிறு போல கிழித்து அங்கிருந்து கீற்று கொட்டகையில் தூக்கிட்டு இறந்தார்.

    இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் திடுக்கிட்டனர். இதுபற்றி தகவலறிந்த ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×