என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒடுகத்தூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள அத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி மகன் வல்லரசு (வயசு 19). கம்பி கட்டும் தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதனையறிந்த பெற்றோர் இளம்பெண்ணை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த இளம்பெண் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காதலி இறந்த துக்கத்தில் மனமுடைந்து வல்லரசு சுற்றி திரிந்தார். நேற்று மாலை அவரது விவசாய நிலத்துக்கு சென்றார். அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டை கயிறு போல கிழித்து அங்கிருந்து கீற்று கொட்டகையில் தூக்கிட்டு இறந்தார்.
இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் திடுக்கிட்டனர். இதுபற்றி தகவலறிந்த ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்