search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு
    X

    கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு

    கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு போனது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை அருகே பெரியநாயக்கன் பாளையம் பிரஸ் காலனி காந்திஜி காலனியை சேர்ந்தவர் முருகேசன் (48). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று மாலை முருகேசன் வேலைக்கு சென்று விட்டார்.

    அவரது மனைவி, மகன், மகள் பக்கத்து வீட்டில் உதவிக்கு சென்றனர். இரவு அவர்கள் அங்கு தூங்கி விட்டனர்.

    அதிகாலை 3 மணிக்கு முருகேசன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

    பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் பிரெஸ்லெட், 4 பவுன் நெக்லஸ் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு திருட்டு போய் இருந்தது. இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குபதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×