search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய் கண்டித்ததால் தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை
    X

    தாய் கண்டித்ததால் தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை

    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டில் வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளைத்தை சேர்ந்தவர் சத்திய பிரியா (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சத்திய பிரியாவிடம் அவரது தாய் வீட்டு வேலையில் தனக்கு உதவி செய்யுமாறு கூறினார். ஆனால் அவர் வேலை செய்ய மறுத்துவிட்டார். இதனையடுத்து சத்திய பிரியாவை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த சத்திய பிரியா வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சத்திய பிரியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×