search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெம்பாக்கம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் பலி
    X

    வெம்பாக்கம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் பலி

    வெம்பாக்கம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்த முதியவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அருகே உள்ள குண்டையாந்தாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 65). கூலி தொழிலாளி. இவர் தினமும் காலையில் மேனலூர் கிராமத்திற்கு சென்று டீ குடிப்பது வழக்கம்.

    இன்று காலை டீ கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். வழியில் காலை கடன் கழிக்க சாலையை விட்டு இறங்கினார்.

    அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார். தூசி போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பியை மாற்றியமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×