என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும் - கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்
Byமாலை மலர்30 Oct 2018 6:06 PM GMT (Updated: 30 Oct 2018 6:06 PM GMT)
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.
நாமக்கல்:
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் நன்னீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து உற்பத்தி ஆகும். எனவே மழைக்காலங்களில் மழை நீரானது வீடுகளின் மேற்பகுதிகளிலும், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் ஆகியவற்றில் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். நாமக்கல் நகராட்சி என்.ஜி.ஜி.ஒ. காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்றும், முறையாக மூடி பயன்படுத்தப்படுகின்றனவா? என்றும், குப்பைகள் அகற்றப்பட்டு இருக்கின்றதா? என்றும் நேரில் பார்வையிட்டார். மேலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு, அதை உருவாகாமல் தடுக்கும் முறைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் மளிகை கடைகளை பார்வையிட்ட கலெக்டர், கடையில் வைக்கப்பட்டுள்ள ‘பிரிட்ஜ்’ பின்புறத்தில் நீர் தேங்கும் பகுதியினையும், குளிர்பான பாட்டில்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்றும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கல்விக்கரசன் உள்பட சுகாதார அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் நன்னீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்து உற்பத்தி ஆகும். எனவே மழைக்காலங்களில் மழை நீரானது வீடுகளின் மேற்பகுதிகளிலும், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் ஆகியவற்றில் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். நாமக்கல் நகராட்சி என்.ஜி.ஜி.ஒ. காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்றும், முறையாக மூடி பயன்படுத்தப்படுகின்றனவா? என்றும், குப்பைகள் அகற்றப்பட்டு இருக்கின்றதா? என்றும் நேரில் பார்வையிட்டார். மேலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு, அதை உருவாகாமல் தடுக்கும் முறைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் மளிகை கடைகளை பார்வையிட்ட கலெக்டர், கடையில் வைக்கப்பட்டுள்ள ‘பிரிட்ஜ்’ பின்புறத்தில் நீர் தேங்கும் பகுதியினையும், குளிர்பான பாட்டில்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்றும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது நாமக்கல் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் கல்விக்கரசன் உள்பட சுகாதார அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X