search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு
    X

    சிவகங்கையில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு

    சிவகங்கை மாவட்டத்திலும் திடீர் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #Dengue
    சிவகங்கை:

    தமிழகம் முழுவதும் தற்போது காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்திலும் திடீர் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் தாயமங்கலம் ஷண்மிகா (வயது 3) பாகனேரியை சேர்ந்த கவின்(10) இடையமேலூரை சோந்த ஆறுமுகம் ஆகிய 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையொட்டி அவர்கள் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×