என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் அருகே பொதுமக்கள் நூதன ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்28 Oct 2018 4:53 PM GMT (Updated: 28 Oct 2018 4:53 PM GMT)
அரியலூர் அருகே சாலையை ஆக்கிரமித்து சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மண்டை ஓடு படத்துடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மணக்குடையான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சோழன்பட்டி பொது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை அருகிலுள்ள தனியார் சிமெண்டு நிறுவனம் ஆக்கிரமித்து சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டி வருகிறது.
இதனை கண்டித்து சோழன்பட்டி, தாமரைப்பூண்டி, ஆதனக்குறிச்சி, மணக்குடையான் பொதுமக்கள் மண்டை ஓடு படத்துடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர் அருள்மொழிவர்மன் தலைமை தாங்கினார். இதில் மணக்குடையான் ஊராட்சி தாமரைப்பூண்டி-சோழன்பட்டி சாலையை பஞ்சாயத்து தீர்மானத்தை மீறி ஆக்கிரமிக்காதே, சுரங்கத்தில் வெடிவைத்து கர்ப்பிணி சிசுவை அழிக்காதே, சோழன்பட்டிக்கு அருகில் மணல்மேடு அமைத்து ஊர் முழுவதும் புழுதியை கிளப்பி நுரையீரல் தொற்றை ஏற்படுத்தாதே, சுரங்கத்தை சுற்றி 33 சதவீதம் பசுமை பகுதி ஏற்படுத்து என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதில் மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முகசுந்தரம், வைத்திலிங்கம், நீலமேகம், கணேசன், கலியபெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி பாலசிங்கம், மதியழகன், நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் ராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மணக்குடையான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சோழன்பட்டி பொது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை அருகிலுள்ள தனியார் சிமெண்டு நிறுவனம் ஆக்கிரமித்து சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டி வருகிறது.
இதனை கண்டித்து சோழன்பட்டி, தாமரைப்பூண்டி, ஆதனக்குறிச்சி, மணக்குடையான் பொதுமக்கள் மண்டை ஓடு படத்துடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர் அருள்மொழிவர்மன் தலைமை தாங்கினார். இதில் மணக்குடையான் ஊராட்சி தாமரைப்பூண்டி-சோழன்பட்டி சாலையை பஞ்சாயத்து தீர்மானத்தை மீறி ஆக்கிரமிக்காதே, சுரங்கத்தில் வெடிவைத்து கர்ப்பிணி சிசுவை அழிக்காதே, சோழன்பட்டிக்கு அருகில் மணல்மேடு அமைத்து ஊர் முழுவதும் புழுதியை கிளப்பி நுரையீரல் தொற்றை ஏற்படுத்தாதே, சுரங்கத்தை சுற்றி 33 சதவீதம் பசுமை பகுதி ஏற்படுத்து என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதில் மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க சண்முகசுந்தரம், வைத்திலிங்கம், நீலமேகம், கணேசன், கலியபெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய அணி பாலசிங்கம், மதியழகன், நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் ராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X