search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுங்கையூரில் 2 ரவுடிகள் கைது- புழல் ஜெயிலில் அடைப்பு
    X

    கொடுங்கையூரில் 2 ரவுடிகள் கைது- புழல் ஜெயிலில் அடைப்பு

    கொடுங்கையூரில் சமீப காலமாக ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வந்த 2 ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களை புழல் ஜெயிலில் அடைத்தனர். #PuzhalJail
    பெரம்பூர்:

    கொடுங்கையூரில் ராஜ ரத்தினம் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். எழில்நகரை சேர்ந்தவர் இம்மானுவேல்.

    இவர்கள் 2 பேரும் கொடுங்கையூர் பகுதியில் வழிப்பறி, அடிதடி செய்து வந்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    ஏற்கனவே இவர்கள் பல முறை கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். வெளியே வந்த இவர்கள் இனிமேல் குற்றம் செய்யமாட்டோம். திருந்தி வாழ்வோம் என்று எழுதி கொடுத்தனர்.

    ஆனால், சமீப காலமாக மீண்டும் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் துணை கமி‌ஷனர் சாய் சரண், 2 ரவுடிகளையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ரவுடிகள் மணிகண்டன், இம்மானுவேல் ஆகியோரை கைது செய்தார். பின்னர் குற்றநடைமுறை சட்டப்படி மணிகண்டன் 56 நாட்களும், இம்மானுவேல் 156 நாட்களும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #PuzhalJail
    Next Story
    ×