search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே திமுக பிரமுகரிடம் பணம் கேட்டு தகராறு- வாலிபர் கைது
    X

    பண்ருட்டி அருகே திமுக பிரமுகரிடம் பணம் கேட்டு தகராறு- வாலிபர் கைது

    பண்ருட்டி அருகே திமுக பிரமுகரிடம் வட்டிக்கு பணம் கேட்டு தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தரவடிவேல் (வயது 47), தி.மு.க. பிரமுகர். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (36). இவர் சுந்தரவடிவேலிடம் வட்டிக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் சுந்தரவடிவேலுவிடம் தகராறு செய்தார்.

    இதுகுறித்து சுந்தரவடிவேல் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×