search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ- தொழிலாளர் தப்பினர்
    X

    பெருந்துறை அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ- தொழிலாளர் தப்பினர்

    பெருந்துறை அடுத்த எல்லைமேடு பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் நூல் மற்றும் பஞ்சு பேல்கள் எரிந்து போனது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சென்னிமலை ரோடு எல்லைமேடு பகுதியில் ஈரோடு வீரப்பன் சத்திரம், பெரிய வலசு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் மணிகண்டன் ஸ்பின்னிங் மில் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த மில்லில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை இந்த ஸ்பின்னிங் மில்லின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மின் கசிவினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அருகில் இருந்த நூல் மற்றம் பஞ்சு பேல்களில் பற்றிய தீ மளமளவென்று அருகில் பரவியது. இதனைக்கண்ட தொழிலாளர்கள் தப்பி ஓடி வந்தனர். மேலும் உடனடியாக தீயை அணைக்க முயன்று முடியாமல் போகவே பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    எனினும் ஏராளமான பொருட்கள் இந்த தீ விபத்தில் எரிந்து போனது. 

    Next Story
    ×