என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெருந்துறை அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ- தொழிலாளர் தப்பினர்
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த சென்னிமலை ரோடு எல்லைமேடு பகுதியில் ஈரோடு வீரப்பன் சத்திரம், பெரிய வலசு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் மணிகண்டன் ஸ்பின்னிங் மில் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த மில்லில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை இந்த ஸ்பின்னிங் மில்லின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மின் கசிவினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அருகில் இருந்த நூல் மற்றம் பஞ்சு பேல்களில் பற்றிய தீ மளமளவென்று அருகில் பரவியது. இதனைக்கண்ட தொழிலாளர்கள் தப்பி ஓடி வந்தனர். மேலும் உடனடியாக தீயை அணைக்க முயன்று முடியாமல் போகவே பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
எனினும் ஏராளமான பொருட்கள் இந்த தீ விபத்தில் எரிந்து போனது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்