search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே காட்டு யானை தாக்கி பால் வியாபாரி பலி
    X

    கோவை அருகே காட்டு யானை தாக்கி பால் வியாபாரி பலி

    கோவை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பால் வியாபாரியை காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூரை சேர்ந்தவர் ரமேஷ் (35). பால் வியாபாரி. நேற்று இரவு பால் எடுக்க தொண்டாமுத்தூரில் இருந்து விராலியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது விராலியூர் அருகே வரும் போது சாலையின் எதிர்புறம் திடீரென வந்த ஒற்றை காட்டு யானை சுரேஷை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அந்த பகுதியில் யானையை விரட்டும் பணியில் இருந்த வனத்துறையினர் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது ரமேஷ் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே வனத்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ரமேசை மீட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத் திரிக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேசின் மோட்டார் சைக்கிளையும் யானை மிதித்து சேதப்படுத்தி உள்ளது. உயிர் பலி வாங்கிய யானை தொடர்ந்து நரசீபுரம் விராலியூர் பகுதியில் முகாமிட்டு இருக்கிறது.

    விளைநிலங்களில் பயிர்களை நாசம் செய்து வரும் அந்த யானை தற்போது உயிர் பலி வாங்கி உள்ளது. எனவே கும்கி யானையை கொண்டு உடனடியாக ஒற்றை காட்டு யானையை காட்டுக்குள் துரத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    Next Story
    ×